Sunday, May 31, 2009

சுமை

சேய் குரங்கை சுமக்கும் தாய்
கிளை விட்டு கிளை தாவி
மரம் விட்டு மரம் தாவும் போது
தவற விட்டது -
பிள்ளை தாவ கற்று பழகி கொண்டது
என்று எண்ணி விட்டது!!!
பிள்ளை தவழ்ந்தது தாவியது
தவழ்ந்தது தாவியது
கடைசியில் தாவ கற்றும் கொண்டது
ஒ மனிதனே!!!
நீயும் அவன் இடமிருந்து தான் வந்தாய்
நீ மட்டும் ஏன் உன்
தாய் தந்தையை கடைசி வரை
சுமக்க சொல்கிறாய்
அவர்களின் சுமையை நீ சுமை
சுகம் அவர்களை சுமக்கட்டும்
சுமையை நாம் சுமப்போம்.

--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
allvoices

No comments: