Thursday, October 22, 2009

தூரத்து இடி முழக்கம்

தொலைபேசியிலும் கணினியிலும்
நண்பர்களுடன் உரையாடல்
இருப்பினும் மனம்
சுமையாய் சுமக்கிறது
அக்தோ எங்கோ ஓர்
ஓரத்தில் இருந்து கேட்கிறது
உன்னக்காக நான்
வருகிறேன் என்று.
allvoices

Wednesday, October 14, 2009

திரைத்துறையும் என் தலைநகரமும்

என் தலைநகரம் என்றதும் சென்னை பற்றி நான் சொல்ல வரவில்லை. இது என் தலைநகரமான மதுரையும் சினிமாத்துறையின் செயல்படும் தான் இந்த பதிப்பு.

கடந்த 5-6 வருடங்களாக தமிழ் திரை உலகில் வரும் சினிமாக்களில் மதுரை அல்லது மதுரை சுற்றி எடுக்க படுபவை அதிகம் ஆகிவருகின்றன. இதற்கு பதில் கிடைக்க எனக்கு தெரிந்த பத்திரிகையாளர் நண்பர் ஒருவரிடம் பேசினேன். அவர் சென்னையை புர்விகமாக கொண்டு, பிறந்து வளர்ந்தவர். அவர் சொன்ன பதில்கள் மதுரையில் பிறந்து வளர்ந்த எனக்கு பெருமையாக தான் இருக்கிறது.

முதலில், தென் தமிழகத்தை குறிப்பாக மதுரையும் அதை சுற்றி இருக்கும் வட்டாரத்தின் வாழ்கையை படம் பிடித்தல் அது உயிர் ஓட்டமாக இருக்கும் இதுவே தமிழகத்தின் மற்ற பகுதிகளில் படத்துக்கு தேவையான உயிரோட்டம் கிடைக்க முடியவில்லை.

அடுத்து, தமிழ் மொழியை இன்னும் சங்க தமிழில் பேசும் வழக்கம் தென் தமிழகத்தில் மட்டும் தான் இருக்கிறது. உதரணமாக, பிறகு, சரகம்,லந்து, ஆகட்டும், பையா, களவாணி பையன், ஏணி, கோளாறு, இழவு போன்ற வார்த்தைகள் இன்னும் மதுரை வட்டாரத்தில் தான் பயன்படுத்தப்படுகிறது.

அடுத்தாக, மதுரை வட்டாரத்தில் படம் எடுத்தால் அதிர்சடத்தில் படம் நன்றாக போகிறதாம். இது அவரின் வதம்.

எப்படி இருப்பினும் எமது மண்ணை பற்றி பெருமையாக பேசுவதும் சித்தரிப்பதும் அந்த மண்ணின் மைந்தராகிய எண்களும் பெருமை தான். நாங்களும் மார் தட்டி சொல்லுவும் "நாங்களும் மதுரை கரங்க டா"
allvoices

Monday, October 12, 2009

எங்கு செல்கிறோம்???????

கடந்த சில நாட்களாக எண்ணுள் எழும் கேள்வி. இந்த உலகம் சரியான பாதையில் தான் செல்கிறதா? நாம் சரியான பாதையில் தான் செல்கிறோமா?

இந்த சிந்தனை எழும் பொது, நான் எனக்கு கேட்டுக்கொண்ட முதல் கேள்வி, நாம் தாய் மொழி பற்றி.

நான் அமெரிக்காவிற்கு வேலை பார்க்க வந்து 2 வருடங்கள் ஆகின்றன. இந்த 2 வருடத்தில் எனக்கு நாம் மொழி பற்றி மற்றவர்களிடம் வந்த அனுபவங்களே இந்த பதிப்பு.

முதலில், எத்தனை பேர் நாம் நம் தாய் மொழியை பேசுகின்றோம். நம் நண்பர்களிடம், பெற்றோரிடம், உறவினரிடம், நம் பார்க்கும் மற்ற தமிழர்களிடம். இதற்கு உண்மையான பதில் கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. நம்முள் ௨0 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் தான் என்று. அதிரிச்சியில் இருந்து வந்து ஏன் நாம் இந்த பாதையை அடைந்தோம் என்று பார்போம்.

என்னுடைய நண்பர் ஒருவர், சரளமாக தமிழ் பேச கூடியவர், அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை, Hi Dude, How are you doing?. இதை தமிழ் தெரியாதவர்களிடம் கேட்டால் சரி தான், ஆனால் தெரிந்தவர்களிடம் அதுவும் சுமார் 10 வருடம் பழகிய நண்பரிடம், மிக வருத்தமாக தான் இருக்கிறது.

இன்னொருவர், மிக நன்றாக தமிழில் பேசிக்கொண்டு இருப்பார், இடையில் You know what? Are You Crazy? போன்ற வார்த்தைகள் அதிகம் பயன்படுத்துவர்.

சமீபத்தில் நான் செய்த தவறு ஒன்று, என்னுடைய நெருங்கிய தோழனிடம் பேசும் பொழுது, நான் wind-க்கு against நடந்தேன் என்றேன். ஆங்கிலத்தை தமிழோடு கலந்து பேசியதில் எனக்கும் வருத்தம் தான் அந்த வருத்தத்தின் விழைவு தான் இந்த பதிப்பு.

ஆம், என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, நம்முடைய அலுவலகத்தில் ஆங்கிலம் பேசி ஆகவேண்டிய கட்டயத்தில் இருக்கிறோம். ஆனால், வெளியில் நண்பர்களிடம், பெற்றோரிடம், உறவினரிடம், நம் பார்க்கும் மற்ற தமிழர்களிடம் தமிழில் பேசலாமே.

நான் இதை பற்றி சிந்திக்கும் பொழுது வலைத்தளத்தில் படித்த சில விஷயங்கள் நாம் மொழி பற்றி.

1. இப்படியே பாதுகாப்பின்றி போனால் நம் மொழி இன்னும் சில வருடங்களில் அழிந்துவிடும்.

2. உலகில் மிக தொன்மையான மொழி என்று பெயர் பெற்ற தமிழ், சரித்திரத்திலும், சுவடுகளிலும் தான் இருக்கும்.

3. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியின் வாக்கு பொய்ப்பித்து போய்விடும்.

4. தமிழை தாய்மொழியாக கொண்டு பேச முடியாதவர்களின் எண்ணிக்கை 80 சதவிகிதம் எட்டும் இன்னும் 20 ஆண்டுகளில்.

நீங்கள் இதை படிக்கும் பொழுது உங்களிடம் நான் கேட்பது, என்னோடு சேர்ந்து தமிழ் மொழி காக்க வாங்க என்றல்ல.... உங்கள் மொழியை
அழிவில் இருந்து பாதுகாக்க உங்களால் முடிந்ததை செய்யுங்கள். பார்க்கும் தமிழ் நண்பர்களிடம் தமிழில் பேசுங்கள், நீங்கள் அப்படி பேசும் பொழுது உங்களின் அல்லது அவர்களின் பிள்ளைகளும் உங்களிடம் இருந்து இந்த அமுத மொழிய கற்றுகொள்ளட்டும்.

உங்கள் நேரத்தை தமிழுக்காக சில நிமிடம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

என்றும் தமிழை நேசிக்கும்,
இரா. சுகேஷ்குமார்
allvoices

Monday, October 5, 2009

மார்கழி

கோவில் மணி ஓசை
கடும் குளிர்
கலர் கோலங்கள்
சுப்ரபாதம்
சிட்டு குருவியின் சலசலப்பு
இத்தனைக்கும் நடுவில்
கட்டி இழுக்கும் தூக்கம்
மார்கழி மயக்கத்தில்.......
allvoices

Thursday, October 1, 2009

வண்டிக்காரன் பாட்டு

தம்பி: ''காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?''

அண்ணன்: எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!''

தம்பி: ''நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருங்கிக் கேட்கையிலே''-''

அண்ணன்: எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!''

--மகாகவி பாரதியார்

allvoices