Thursday, October 1, 2009

வண்டிக்காரன் பாட்டு

தம்பி: ''காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?''

அண்ணன்: எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!''

தம்பி: ''நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருங்கிக் கேட்கையிலே''-''

அண்ணன்: எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!''

--மகாகவி பாரதியார்

allvoices

No comments: