Sunday, September 28, 2008

சிறை

பெற்றோரை பிரிந்து
உடன் பிறந்தாரை பிரிந்து
உற்றார் உறவினரை பிரிந்து
நட்பை பிரிந்து
பல்லாயிரம் மையில்கள் தாண்டி
வாழ்கிறோம் -
தனிமை சிறையில்.......
டாலருக்கும் ஐரோவுக்குமாக!!!
allvoices

Thursday, September 25, 2008

நீ உன்னை மறந்தால்

நீ உன்னை மறந்தால்
அடுபடியில் அனலில் உட்கார்ந்து இருபாய்
ஆனால் குளிர்வதை உணர்வாய்!!!
யாரும் இல்லாமல் தனிமையில்
கடலில் பயணம் செய்வாய்
ஆனால் உன்னுடன் ஊரே
வருவதாய் உணர்வாய்!!!
நீ உன்னை மறந்தால்.........
சிரித்து கொண்டு நடப்பாய்!!!
கட்டிலே இருக்காது ஆனால்
மெத்தன தூக்கம் வரும்!!!
பார்க்கும் இடம் எல்லாம்
அழகாய் தோன்றும்!!!
நீ உன்னை மறந்தால்...........
allvoices

Wednesday, September 24, 2008

பிரிவு

இறந்த காலத்திலும்
நிகழ் காலத்திலும்
நடந்ததை எண்ணி
உப்பு தண்ணீரில் முகம்
மறக்க நினைக்கும் போதும்
மண்டியிட மறுக்கிறது மனம்
பகிர்த்து கொண்ட
சந்தோசங்களும் துக்கங்களும்
அளவில்லா!!!!!!!!!!!
குஞ்சை இழந்த குருவியாய்
வாடி கிடைக்கிறது மனம்
சிலரின் பிரிவால்..............
allvoices

Thursday, September 18, 2008

காதல்

புரியாமல் இருப்பது அல்ல காதல்
புரிந்தது புரியாமல் செய்வது தான் காதல்
துன்பத்தை கொடுப்பது அல்ல காதல்
இன்பத்தில் துன்பத்தை எடுப்பது தான் காதல்
காதலித்து பார்
உன்னை நீ மறந்து
உலகை நீ நேசிக்க ஆரம்பிப்பாய்!!!!
allvoices

Monday, September 15, 2008

வளையல்

சிரிப்பொலிக்கும் ஓசை
அதைவிட சத்தமாக சலசலப்பு
நேரம் கேட்ட எனக்கு
பாசமான தங்கையிடம் இருந்து வந்தது பதில்
வளையல் வாட்சை வென்றுவிட்டது!!!!!!!!!!!
----------------------------------------------------------
சத்தம் இல்லாத நேரம்
சலசலகும் ஓசை
உறங்கிக்கொண்டு இருப்பவனை
உறக்கமில்லாமல் செய்கிறது
கண்ணி பெண்ணின்
கை வளையல்கள்
allvoices

Wednesday, September 10, 2008

உறவுகள்

உலகில் நீ யாரோ தான்
ஆனால் யாருக்கோ நீ தான் உலகமே
பழகும் பொழுது வலிகள் தெரிவது இல்லை
பழகும் உறவு விலகும் பொது
இதயங்கள் தாங்காது
விலகிய உறவு சேரும் பொது
கண்களும் தாங்காது............

--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
allvoices

Tuesday, September 9, 2008

கடல்

ஓயாமல் உழைக்கிறது
உறங்காமல் ஒலிக்கிறது
நீ எழுப்பும் சத்தம் ஓவொன்றும் நிசப்தம்
தனிமையில் இருக்கும் எனக்கு
உன் ஓசை ஒரு தாலாட்டு
உன் தென்றல் என் ஜீவன்
உன் அமைதி என் ஆழ்நிலை தியானம்
மொத்தத்தில் நீ
வாழ்க்கை பாதையின் நெறி!!!!!!
--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
allvoices