Friday, December 19, 2008

மதுரை

மதுரை
தூங்க நகரம்
உலகின் மிக பெரிய கிராமம்
இம்மண்ணின் மக்கள்
வாழ்வில் கைவிடதவை நான்கு
அழகர் திருவிழா, கறி சோறு,
கொள்கை, கோபம்
அன்பு இருக்கும் இடத்தில
குணம் உண்டு
அன்பு இருக்கும்
அதே இடத்தில் தான்
இங்குள்ளவர்களிடம் அரிவாளும் உண்டு
சொல்லும் சொல்லில் சுத்தம் உண்டு
செய்யும் செயலில் தீர்க்கம் உண்டு
எதிரியே வந்தாலும்
அன்னமிட்டு உபசரிப்பது உண்டு
தமிழகத்தில் வீரத்துக்கு பெயர்கள்
சொல்ல நிறைய உண்டு
கட்டபொம்மன், மருது சகோதர்கள்
மற்றும் பலர்
இம்மண்ணை சேர்ந்தவர்கள்
நாங்களும் மார்தட்டி சொல்லுவோம்
நாங்க மதுரைகரங்க டா.............
allvoices

Wednesday, December 17, 2008

கழகக்காரன்

உதிர்த்து அரை நுற்றண்டுக்கும் மேல்
ஆகிவிட்டது - வந்த பாதையில்
சந்தித்த வெற்றிகளை விட
தோல்விகள் தான் அதிகம்
ஆனால் நாங்கள் ஒன்றும்
இலைகள் அல்ல
வாடி, உதிரிந்து, புதிதாய் பூப்பதற்கு
நாங்கள் சூரியன்
கிழக்கே உதிர்த்து மேற்கே மறைந்தாலும்
மீண்டும் உதிர்பவர்கள்
உதிரிந்தவர்கள் இல்லை.
allvoices

Friday, November 28, 2008

காணி நிலம் வேண்டும்

காணி நிலம் வேண்டும் பராசக்தி

காணி நிலம் வேண்டும் - அங்கு

தூணில் அழகியதாய் நன்மாடங்கள்

துய்ய நிறத்தினவாய் - அந்தக்

காணி நிலத்திடையே ஓர் மாளிகை

கட்டித் தர வேண்டும் - அங்கு

கேணி அருகினிலே தென்னைமரம்

கீற்றும் இளநீரும்பத்துப்

பனிரெண்டு தென்னைமரம்

பக்கத்திலே வேணும் நல்ல

முத்துச் சுடர்போலே நிலாவொளி

முன்பு வர வேணும் அங்குக்

கத்தும் குயிலோசை சற்றே வந்து

காதிற் படவேணும் என்றன்

சித்த மகிழ்ந்திடவே நன்றாயிளந்

தென்றல் வரவேணும்

பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு

பத்தினிப் பெண்வேணும் - எங்கள்

கூட்டுக் களியினிலே கவிதைகள்

கொண்டு தரவேணும் அந்தக்

காட்டு வெளியினிலே அம்மா

நின்றன்காவலுற வேணும் என்றன்

பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப்

பாலித்திட வேணும்.

-- -பாரதி

allvoices

Wednesday, November 5, 2008

வாழ்க்கை

ஆயிரம் முறை சிந்தித்து பார்த்துவிட்டேன்
முடிவில் சிரிப்பு மட்டுமே மிஞ்சியது
வேகமாக ஓடும் வாழ்க்கையை பார்த்து...
allvoices

Saturday, November 1, 2008

உழைப்பாளி

பிள்ளையை தூக்கிய உடன்
கதறி அழுகிறது
அதற்கு தெரியவில்லை
அப்பன் உழைத்து காய்ந்த கைகளால்
தன்னை தொடுகிறான் என்று.
allvoices

Wednesday, October 15, 2008

நிம்மதி

குளுகுளு அறை
பஞ்சினால் பட்டு மெத்தை
உறங்கும் பொது உடம்பு பிடிக்க ஆட்கள்
மெல்லிய இசை
சுற்றி அலங்கார விளக்குகள்
இருப்பினும் தூக்கம் இல்லை
புது பணக்காரனுக்கு
கட்டன் தரையில்
காற்றோட்டமாக படுத்து பழகியதால்.....
allvoices

Thursday, October 2, 2008

கோபம்

கண்கள் சிவகின்றது
கைகள் நடுங்குகின்றன
வார்த்தைகள் வாயில் தடுமாறுகின்றது
நெஞ்சம் படபடக்கிறது
கண்ணில் தெரியும் அக்னியால்
சுற்றி களபரம் நடக்கிறது
சிறிது நேரத்தில்
நிம்மதி இன்றி தவிக்கிறது மனசு
கோபத்தில் உதிர்த்த வார்த்தைகளால்......
allvoices

Sunday, September 28, 2008

சிறை

பெற்றோரை பிரிந்து
உடன் பிறந்தாரை பிரிந்து
உற்றார் உறவினரை பிரிந்து
நட்பை பிரிந்து
பல்லாயிரம் மையில்கள் தாண்டி
வாழ்கிறோம் -
தனிமை சிறையில்.......
டாலருக்கும் ஐரோவுக்குமாக!!!
allvoices

Thursday, September 25, 2008

நீ உன்னை மறந்தால்

நீ உன்னை மறந்தால்
அடுபடியில் அனலில் உட்கார்ந்து இருபாய்
ஆனால் குளிர்வதை உணர்வாய்!!!
யாரும் இல்லாமல் தனிமையில்
கடலில் பயணம் செய்வாய்
ஆனால் உன்னுடன் ஊரே
வருவதாய் உணர்வாய்!!!
நீ உன்னை மறந்தால்.........
சிரித்து கொண்டு நடப்பாய்!!!
கட்டிலே இருக்காது ஆனால்
மெத்தன தூக்கம் வரும்!!!
பார்க்கும் இடம் எல்லாம்
அழகாய் தோன்றும்!!!
நீ உன்னை மறந்தால்...........
allvoices

Wednesday, September 24, 2008

பிரிவு

இறந்த காலத்திலும்
நிகழ் காலத்திலும்
நடந்ததை எண்ணி
உப்பு தண்ணீரில் முகம்
மறக்க நினைக்கும் போதும்
மண்டியிட மறுக்கிறது மனம்
பகிர்த்து கொண்ட
சந்தோசங்களும் துக்கங்களும்
அளவில்லா!!!!!!!!!!!
குஞ்சை இழந்த குருவியாய்
வாடி கிடைக்கிறது மனம்
சிலரின் பிரிவால்..............
allvoices

Thursday, September 18, 2008

காதல்

புரியாமல் இருப்பது அல்ல காதல்
புரிந்தது புரியாமல் செய்வது தான் காதல்
துன்பத்தை கொடுப்பது அல்ல காதல்
இன்பத்தில் துன்பத்தை எடுப்பது தான் காதல்
காதலித்து பார்
உன்னை நீ மறந்து
உலகை நீ நேசிக்க ஆரம்பிப்பாய்!!!!
allvoices

Monday, September 15, 2008

வளையல்

சிரிப்பொலிக்கும் ஓசை
அதைவிட சத்தமாக சலசலப்பு
நேரம் கேட்ட எனக்கு
பாசமான தங்கையிடம் இருந்து வந்தது பதில்
வளையல் வாட்சை வென்றுவிட்டது!!!!!!!!!!!
----------------------------------------------------------
சத்தம் இல்லாத நேரம்
சலசலகும் ஓசை
உறங்கிக்கொண்டு இருப்பவனை
உறக்கமில்லாமல் செய்கிறது
கண்ணி பெண்ணின்
கை வளையல்கள்
allvoices

Wednesday, September 10, 2008

உறவுகள்

உலகில் நீ யாரோ தான்
ஆனால் யாருக்கோ நீ தான் உலகமே
பழகும் பொழுது வலிகள் தெரிவது இல்லை
பழகும் உறவு விலகும் பொது
இதயங்கள் தாங்காது
விலகிய உறவு சேரும் பொது
கண்களும் தாங்காது............

--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
allvoices

Tuesday, September 9, 2008

கடல்

ஓயாமல் உழைக்கிறது
உறங்காமல் ஒலிக்கிறது
நீ எழுப்பும் சத்தம் ஓவொன்றும் நிசப்தம்
தனிமையில் இருக்கும் எனக்கு
உன் ஓசை ஒரு தாலாட்டு
உன் தென்றல் என் ஜீவன்
உன் அமைதி என் ஆழ்நிலை தியானம்
மொத்தத்தில் நீ
வாழ்க்கை பாதையின் நெறி!!!!!!
--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
allvoices

Thursday, August 28, 2008

விதவை

கண்ணீர் விட்டு

கதறி அழுது

கலை கோலம் கலைந்து

காலம் கடத்த காத்து இருக்கிறாள்

கள்வர்கள் அவளை கைம்பெண் என்கிறார்கள்..........
allvoices

Tuesday, August 26, 2008

தென்றல்

சுட்டெரிக்கும் வெயில்
உடம்பை வருத்தும் அனல் காற்று
இருப்பினும் மென்மையாய்
என்னை தீண்டிய உணர்வு
அவை என் கனவு தேவதை கைவிரல்கள்!!!!
--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
allvoices

Wednesday, August 20, 2008

மழை

வானிலை அறிவிப்பு
இன்று இடி உடன் கூடிய பலத்த மழை என்று!!!
அதை கேட்ட விவசாயிக்கு
இடி இதயத்தில்
மழை கண்களில் - கண்ணீர் ஆக!!!!!!!!!

--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
allvoices

Thursday, August 14, 2008

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்


61 ஆண்டு காலம் முடிந்துவிட்டது

62-ம் ஆண்டில் நம் நாடு மேலும் வளம்பெற

இறைவனிடம் மன்றாடுவோம்
allvoices

Monday, August 11, 2008

நட்பு

நாம் கைகோர்த்து நடந்து வந்த
பாதையை சற்று திரும்பி பார்த்தால்
இருப்பவை நாம்
எடுத்துவந்த நினைவுகளும் அல்ல
விட்டுசென்ற நினைவுகளும் அல்ல
அவை நம் காலத்தின் சுவடுகள்...............

--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
allvoices

Wednesday, August 6, 2008

மரணம்

இது கவிதை அல்ல........ எனக்கு பிடித்த வரிகள்

மரணத்தை பற்றி அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை
நீ இருக்கும் வரை அது வர போவது இல்லை
அது வரும்பொழுது நீ இருக்க போவது இல்லை..............

----சுவாமி விவேகனந்தர்

allvoices

Wednesday, July 30, 2008

இளைஞனுக்கு வேலை

எனக்கு வேலை கிடைப்பதற்கு

நான் படித்த கலித்தொகையும் குறுந்தொகையும்

தேவை இல்லையாம்

பெருந்தொகை ஒன்று வேண்டுமாம்!!!!!!!!
allvoices

Monday, July 28, 2008

பாரதத்தின் இன்றைய விவசாயி

நிலம்,
நிலத்தில் இருப்பது பாதி
இருப்பதில் உழுதது பாதி
உழுததில் விதைத்து பாதி
விதைத்ததில் முளைத்தது பாதி
முளைத்ததில் அறுத்தது பாதி
அறுத்ததில் கிடைத்தது பாதி
கிடைத்ததில் கடனுக்கு கொடுத்தது பாதி.....
allvoices

Friday, July 25, 2008

சில நேரங்களில் தமிழன் ஆக இருக்க மனம் கனக்கிறது

படித்த இடம்: குமுதம் வார இதழ்

இதழின் தேதி: 30-07-2008

செய்தியில் வந்த சில வார்த்தைகள்:

"ரெண்டு நாள் கழிச்சு சொன்னமாதிரி நாமும் அங்கே போக, வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போடுவதற்குள் அதே ஆள் கையில் சர்டிஃபிகேட்டுடன் நின்றார். சர்டிஃபிகேட்டைப் பார்த்தால் சி.சுப்பிரமணியன் என்றிருந்தது. ```பாரதி,' எங்கய்யா?''ன்னு கேட்க, ``அதென்னங்க பெரிய விஷயம்!''னு போனவர் பத்தே நிமிடத்தில் சுப்பிரமணிய பாரதியின் பெயரில் பிற்படுத்தப்பட்டோருக்கான முறையான சான்றிதழுடன் வந்தார். அதைப் பார்த்ததும் நம் கண்களையே நம்மால் நம்ப முடியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்ததும்தான் தெரிந்தது சின்னச்சாமி என்ற தகப்பனார் பெயரை சின்னராஜ் என்று தவறாகக் குறிப்பிட்டிருந்தது. அதையும் மாற்ற முடியுமா என புரோக்கரைத் தேடினோம். பார்ட்டி எஸ்கேப்.

புரோக்கருக்கு பாரதியைத் தெரியாமல் இருக்கலாம். கையெழுத்துப்போட்ட அதிகாரிக்குமா சந்தேகம் வந்திருக்காது! `இவர்கள் பாரதியை மறந்துவிட்டார்களா? அல்லது பணத்தைத் தவிர வேறு எதுவும் இவர்கள் நினைவில் இல்லையா?'"

இந்த செய்தியை படித்து விட்டு என் மனதில் தோன்றியது - "நெஞ்சு பொறுக்க வில்லை இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைப்பதினால்"

வைரமுத்து வின் வடுகபட்டி முதல் வோல்க வரை புத்தகத்தில், ஒரு ரஷ்ய நாட்டவர் பாரதி பற்றி சொன்னது "இந்த மகாகவி-இன் உடம்பில் மேய்த்த ஈட்களின் அளவு ஆட்கள் இல்லையே"

இப்படி ஒரு தலையங்கம் எழுத நான் வேதனைபடுகிறேன். சொல்வதற்கு ஒன்றும் இல்ல.
allvoices

Wednesday, July 23, 2008

பெண்மை

இரவு என்னும் போர்களத்தில்
தலையணை என்னும் முரசொலியில்
கண்ணீர் என்ற ஆயுதத்தோடு
யுத்த முழக்கம் இட்டால்
ஒன்று முடிவு
இல்லது ஆரம்பம்!!!
allvoices

Tuesday, July 15, 2008

சுதந்திரப் பள்ளு

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமேஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சைஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மைஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு)
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்எல்லோரும் சமமென்பது உறுதியாச்சுசங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே.


எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனிநல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்டநயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் - வெறும்வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்.

நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இதுநமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப்பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரிபூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.
allvoices

Wednesday, July 9, 2008

காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்

ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடாஐய பேரிகை கொட்டடா!

பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்

இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளிஇன்னமு தினையுண்டு களித்தோம்;கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்காலன் நடுநடுங்க விழித்தோம்.

காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்;நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;நோக்க நோக்கக் களியாட்டம்.
allvoices

Thursday, July 3, 2008

எனக்கு பிடித்த முதல் கவிதை

தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

--பாரதியார்
allvoices