ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடாஐய பேரிகை கொட்டடா!
பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்
இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளிஇன்னமு தினையுண்டு களித்தோம்;கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்காலன் நடுநடுங்க விழித்தோம்.
காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்;நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;நோக்க நோக்கக் களியாட்டம்.
Wednesday, July 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment