கடந்த 5-6 வருடங்களாக தமிழ் திரை உலகில் வரும் சினிமாக்களில் மதுரை அல்லது மதுரை சுற்றி எடுக்க படுபவை அதிகம் ஆகிவருகின்றன. இதற்கு பதில் கிடைக்க எனக்கு தெரிந்த பத்திரிகையாளர் நண்பர் ஒருவரிடம் பேசினேன். அவர் சென்னையை புர்விகமாக கொண்டு, பிறந்து வளர்ந்தவர். அவர் சொன்ன பதில்கள் மதுரையில் பிறந்து வளர்ந்த எனக்கு பெருமையாக தான் இருக்கிறது.
முதலில், தென் தமிழகத்தை குறிப்பாக மதுரையும் அதை சுற்றி இருக்கும் வட்டாரத்தின் வாழ்கையை படம் பிடித்தல் அது உயிர் ஓட்டமாக இருக்கும் இதுவே தமிழகத்தின் மற்ற பகுதிகளில் படத்துக்கு தேவையான உயிரோட்டம் கிடைக்க முடியவில்லை.
அடுத்து, தமிழ் மொழியை இன்னும் சங்க தமிழில் பேசும் வழக்கம் தென் தமிழகத்தில் மட்டும் தான் இருக்கிறது. உதரணமாக, பிறகு, சரகம்,லந்து, ஆகட்டும், பையா, களவாணி பையன், ஏணி, கோளாறு, இழவு போன்ற வார்த்தைகள் இன்னும் மதுரை வட்டாரத்தில் தான் பயன்படுத்தப்படுகிறது.
அடுத்தாக, மதுரை வட்டாரத்தில் படம் எடுத்தால் அதிர்சடத்தில் படம் நன்றாக போகிறதாம். இது அவரின் வதம்.
எப்படி இருப்பினும் எமது மண்ணை பற்றி பெருமையாக பேசுவதும் சித்தரிப்பதும் அந்த மண்ணின் மைந்தராகிய எண்களும் பெருமை தான். நாங்களும் மார் தட்டி சொல்லுவும் "நாங்களும் மதுரை கரங்க டா"
1 comment:
naa chennai kaaren da!!!
Post a Comment